கொண்டாடும் போதெல்லாம்
திண்டாடும் இந்தியாவே
உனக்கு சுதந்திர தினம் தேவை தானா ?
அன்று ...
பரங்கியரிடம்
பணிந்து பெற்றதை
இன்று ...
பண முதலைகளிடம் அல்லவா
பகிர்ந்து கொடுத்து விட்டோம் !
என்று ...
உண்மை சுதந்திரம்
கிடைக்குமோ ?
கனவு ............. கனவு இல்லாத உலகமும் ...... கனவு இல்லாத மனிதனும் ...... நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான்...... ஆம் ... கனவு காணுங்கள்! அது நிச்சயம் நனவாகும்! அப்பொழுதுதான் உங்களை உலகம் காணும்!!