திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சுதந்திர தினம்

கொண்டாடும் போதெல்லாம்

திண்டாடும் இந்தியாவே

உனக்கு சுதந்திர தினம் தேவை தானா ?


அன்று ...

பரங்கியரிடம்

பணிந்து பெற்றதை


இன்று ...

பண முதலைகளிடம் அல்லவா

பகிர்ந்து கொடுத்து விட்டோம் !


என்று ...

உண்மை சுதந்திரம்

கிடைக்குமோ ?

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

மனசு .......


தவறு செய்த
என் மகளை
தவறி அடிக்க
முடிந்த என்னால் .... ஏனோ ...



தவறாமல்
அழாது இருக்க
முடியவில்லை !


ஒவ்வொரு முறையும்
என் கைதனை
பார்த்து வருத்தப் படுகிறேன் !



"நீ ....
என்னையும் மீறி
சில நேரம்
எல்லை மீறி விடுகிறாய்" என !




என் செய்வேன்...
அழாதே என்று சொல்ல மனம்
தயார்தான் - ஆனால்

கண்ணீர் துடைக்க ......
கை அல்லவா
கடமை மறந்து
கயமை பாராட்டுகிறது !

செவ்வாய், 28 ஜூன், 2011

திருமணம் என்னும் தெய்வீகம்



இரு மனங்களை

இணைத்து

வைத்து ....




ஒரு புது மலரை

உருவாக்கும் ....

அறிய முயற்சி !




மனங்களால்

மணம் வீசுகின்ற ....

மானிட புரட்சி !



மனம் அது

மாறிப்போனால் ....

வரும் வறட்சி !



நல்ல குணங்களால்

மெல்ல வந்து

சேர்ந்திடும் வளர்ச்சி !



இன்னுமா ...

உங்கள் மனங்களில்

இருக்கிறது தளர்ச்சி !



என்றென்றும்

தங்கட்டும்

உங்களிடம் மலர்ச்சி !

வெள்ளி, 24 ஜூன், 2011

காதல் தீதா?


வஞ்சிக் கொடி ஒன்று

கெஞ்சலாய் ...

வாடித் துவண்டிருந்தாள் !



வாஞ்சையாய்

கேட்கையில் ...

துடித்து அழுதாள் !



ஆறுதல் என்ற

அரும் மருந்தால் ...

அன்யோன்யம் ஆனாள் !



ஊன்று கோலாய்

நான் நிற்க ...

என்னையே பற்றி படர்ந்தாள் !



சான்று சொல்ல

நினைக்கையில் ...

அன்னியப் பார்வையில் ஐக்கியமானாள் !



கசங்கிய அவள்

கண்ணை ...

கசக்கியபடி வந்து சேர்ந்தாள் !



வருந்தி அழுததில்

என் இதயம் ...

ஓட்டை ஆனது !



வழிந்த என்

ரத்தத்தில் ... - மீண்டும்

வளரத் துவங்கினாள் !



அந்த வஞ்சிக் கொடி ...

நானோ கேள்விக் குறி !

திருமணம்



சிலருக்கு ...

சொர்க்கத்திலும்


பலருக்கு

ரொக்கத்திலும்


நிச்சயிக்கப்படுகிறது !

திங்கள், 20 ஜூன், 2011

மனசு ....

உனக்காக ... மட்டுமே
இருப்பதாக நினைப்பு ...
எனக்கு ....

யாருக்காகவோ
இருப்பதாக நினைப்பு
உனக்கு ...

வெள்ளி, 17 ஜூன், 2011

தேடல்

நாம் இருவரும்

நடந்து வந்த மணற்பரப்பில்

தேடித்திரிகிறேன் ...



நம் காலடித் தடமாவது

பிரியாமல் இருக்கும் என்ற

நம்பிக்கையில் ...



நம் பாதச் சுவடுகளிடம்

எப்படிச் சொல்வேன்

இனி நீ வரவே மாட்டாய் என்று ...